வாரியம் துவக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளை செயல்படுத்தி கொண்டிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்ற உயரிய நோக்கத்தினை கொண்டதாகும். குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழலை நிலைநாட்டவும், குடிசைவாழ் மக்கள் வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள், அடிப்படை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனைகள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ப்ளாக் சுகாதாரத்தைப் பேணும்வகையில், ப்ளாக் உள் பகுதிகளில் 27.03.2026 அன்று பினாயில் தெளிக்கப்பட்டது
13.03.2026 பணியிட மாறுதலில் செல்லும், பெரும்பாக்கம் கோட்டம் 09 இளநிலை பொறியாளர் வசந்த் சாருக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்த ப்ளாக் 118 மக்கள்!
மகளிர் தினத்தை ஒட்டி திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில், ஆபரேஷன் பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் (SI) சுஜாதா தேவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கேக் வெட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்(08.03.2026).